வீதி பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் இந்தியா வசமானது

Date:

வீதி பாதுகாப்பு உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்திய லெஜன் அணி 14 ஓட்டங்களினால் வெற்றியை தன்வசப்படுத்தியது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை லெஜன் அணி, இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்திருந்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் யூசுப் பத்தான் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களையும், யுவராஜ் சிங் 60 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றுக்கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 182 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 167 ஒட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் யூசுப் பத்தான் மற்றும் இர்பான் பத்தான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர்.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சனத் ஜயசூரிய 43 ஓட்டங்களையும், சிந்தக்க ஜயசிங்க 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

51 வயதாகும் சனத் ஜயசூரிய, 35 பந்துகளில் 43 ஓட்டங்களை பெற்றமை தற்போது அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக காணப்படுகின்றது.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...