வீதி பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் இந்தியா வசமானது

Date:

வீதி பாதுகாப்பு உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்திய லெஜன் அணி 14 ஓட்டங்களினால் வெற்றியை தன்வசப்படுத்தியது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை லெஜன் அணி, இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்திருந்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் யூசுப் பத்தான் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களையும், யுவராஜ் சிங் 60 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றுக்கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 182 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 167 ஒட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் யூசுப் பத்தான் மற்றும் இர்பான் பத்தான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர்.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சனத் ஜயசூரிய 43 ஓட்டங்களையும், சிந்தக்க ஜயசிங்க 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

51 வயதாகும் சனத் ஜயசூரிய, 35 பந்துகளில் 43 ஓட்டங்களை பெற்றமை தற்போது அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக காணப்படுகின்றது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...