உடன் அமுலுக்கு வரும் வகையில் பாஃம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை

Date:

உடன் அமுலுக்குவரும் வகையில் பாஃம் எண்ணெய் இறக்குமதிக்கு முழுமையாக தடை விதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.
இந்த தடையுத்தரவிற்கான வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, இன்றைய தினத்தில் வெளியிடப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள பாஃம் எண்ணெய்யை, விநியோகிக்க சுங்கத் திணைக்களத்திற்கு ஜனாதிபதி தடை விதித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, முள் தேங்காய் பயிரிடும் நடவடிக்கைகளுக்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முள் தேங்காய் பயிர் செய்கையை படிப்படியாக நிறுத்துமாறு 6 மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

முள் தேங்காய் மற்றும் பாஃம் எண்ணெய் பயன்பாட்டை முழுமையாக நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...