ஓய்வுபெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சி மக்களும் இறுதி அஞ்சலி

Date:

ஓய்வுபெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சி மக்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள தூய முழங்காவில் மாதா ஆலய முன்றலில் இறுதி அஞ்சலிக்கான சிறப்பு ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. யாழ்பாணத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வுகளும், வழிபாடும் இடம்பெற்றதை தொடர்ந்து ஆயரின் திருவுடல் மன்னார் எடுத்து செல்லப்பட்டது. இந்த நிலையில் யாழ் மன்னார் வீதியில் குறித்த விசேட அஞ்சலி நிகழ்வு ஏற்பர்டு செய்யப்பட்டிருந்தது.

இதன்புாது அப்பகுதியில் கூடியிருந்த மக்கள் மாலை அணிவித்தும், மலர்தூவியும் இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர். அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், சார்ள்ஸ்நிர்மலநாதன் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

தொடர்ந்து ஆயரின் திருவுடல் வாகன பேரணியுடன் மன்னார் நோக்கி பயணித்திருந்தது.

 

Popular

More like this
Related

புதிய சட்ட விதிகள்: பஸ் சாரதிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை.

பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய சட்டவிதிகள் மற்றும் பரிசோதனைகள்...

கலஹா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை

கண்டி, கலஹா பகுதியிலுள்ள கோவிலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட மர்மக்கல், சந்தை மதிப்பில்லாத...

IMF பிரதிநிதிகள் இன்று நாட்டிற்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உண்மையைக் கண்டறியும் குழுவொன்று இன்று (22)...

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க துருக்கி இணக்கம்.

இலங்கைக்கான  துருக்கி தூதுவர் கலாநிதி செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü...