தாய்வானின் வான்பரப்புக்குள் அத்துமீறிய சீன யுத்த விமானங்கள்

Date:

தாய்வானின் வான் பரப்புக்குள் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு சீன யுத்த விமானங்கள் ஊடுருவியுள்ளதாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 25க்கும் மேற்பட்ட சீனாவின்
குண்டுவீச்சு யுத்த விமானங்கள் மற்றும் அணு ஆயுதம் தாங்கி தாக்குதல் நடத்தக்கூடிய விமானங்கள் உட்பட பல்வேறு விமானங்கள் தாய்வானின் வான்வழி பாதுகாப்பு அடையாளப்படுத்தல் வளையத்துக்குள் ஊடுருவியுள்ளதாக தாய்வான் அறிவித்துள்ளது.

சீனாவின் யுத்த விமானங்கள் பாரிய அளவில் தாய் வானுக்குள் ஊடுருவியுள் மை இதுவே முதற் தடவையாகும் இது சீனாவின் அத்துமீறிய ஆக்கிரமிப்பு வெறியை வெளிப்படுத்துவதாக அமெரிக்கா இந்த சம்பவம் குறித்து உடனடியாக கண்டனமும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. தாய்வான் சீனாவிலிருந்து பிரிந்த ஒரு மாநிலம் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு. ஆனால் தாய்வான் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஒரு பிரதேசம் என்பது சீனாவின் வாதமாகும். இந்த நிலைப்பாடுகள் காரணமாக இந்த வான் பரப்புக்குள் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய...

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...