தேசிய நீர் விநியோக வடிகால் அமைப்புச் சபை விடுத்துள்ள எச்சரிக்கை

Date:

நாட்டில் தற்போது நிலவும் உஷ்ணமான மற்றும் வறட்சியான காலநிலை காரணமாக பல இடங்களில் குடிநீர் விநியோகத்தில் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என தேசிய நீர் விநியோக வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் நீர்த்தேக்கப் பிரதேசங்களில் போதிய அளவு மழை வீழ்ச்சிப் பெறப்படாமை காரணமாக பல இடங்களில் வறட்சியான காலநிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகள் உஷ்ணமான காலநிலையாலும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நீரின் தேவையும் அதிகரிக்க உள்ளதால் நாட்டின் சகல இடங்களுக்கும் சம அளவான அழுத்தத்தோடு நீர் விநியோகத்தை மேற்கொள்ள முடியாமல் இருக்கும் என நீர் விநியோக சபை அறிவித்துள்ளது. பெரும்பாலும் நாட்டின் மேட்டுப் புறமான பகுதிகளில் வாழும் மக்களே நீர் விநியோகப் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட பேருந்து...

107 வயது வரை வாழ்ந்த மூதாட்டி ஹஸீனா உம்மா காலமானார்!

தென் மாகாணத்தின் பெலிகம, கடையவத்த பகுதியைச் சேர்ந்த ஹஸீனா உம்மா என்ற...

எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக மன்றம் ஆழ்ந்த இரங்கல்

பிரபல விருது பெற்ற எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக...

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் குர்ஆன் மத்ரஸாவின் 25ம் ஆண்டு நிறைவு விழா

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் மத்ரஸாவின் முகாமைத்துவ குழு அங்கத்தவர்கள்,...