நாட்டிலுள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு

Date:

நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் நாளை மறு தினம் அதாவது எதிர்வரும் புதன்கிழமை 21 ஆம் திகதி விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகம் இதனை அறிவுறுத்தியுள்ளது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் நினைவாகத் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள், வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அன்றைய தினம் இவ்வாறு பாதுகாப்பு வழங்கவுள்ள தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெறவுள்ள விசேட ஆராதனை நிகழ்வுகள் காரணமாக, தேவாலயத்துக்கு அருகிலுள்ள சில வீதிகளில் நாளை (20) மாலை 4 மணி முதல் மறு நாள் (21) நண்பகல் 12 மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...