மாகாண சம்பியனாக கிண்ணியா நோவா அணியினர் முடிசூடிக் கொண்டது

Date:

46 ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு கிழக்கு மாகாண ரீதியாக உதைப்பந்தாட்டப் போட்டித் தொடர் இடம் பெற்றது. இதில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை ,மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்குபற்றிய நிலையில் இறுதிப் போட்டியில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட கிண்ணியா நோவா அணியினர்மாகாண சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டது.
இறுதிப் போட்டியானது கந்தளாய் லீலரத்ன பொது விளையாட்டு மைதானத்தில் (05) இடம் பெற்றது. அம்பாறை அணியினருடன் நோவா அணியினர் ஒன்றுக்கொன்று எதிர்த்தாடிய நிலையில் 5:0 என்ற கோள் கணக்கில் முதல் சுற்றில் வெற்றியடைந்து இறுதிச் சுற்றுக்கு சென்றிருந்தனர் இறுதிச் சுற்றில் மட்டக்களப்பு அணியினருடன் எதிர்த்தாடி 3:1 என்ற கோள் கணக்கில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட கிண்ணியா நோவா அணியினர் சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டனர்.
போட்டியில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன. இதில் கிழக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தார்கள்.
ஹஸ்பர் ஏ ஹலீம்

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...