யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கொழும்பு உட்பட 13 மாவட்டங்களுக்கு கடுமையான எச்சரிக்கை

Date:

முல்லைத்தீவு, வவுனியா, புத்தளம், குருநாகல், அனுராதபுரம், பொலன்னருவை மற்றும் மொனராகலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெப்பமான காலநிலை மிக தீவிரமாக உள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த திணைக்களம் வெளியிட்ட வெப்பக் குறியீட்டின்படி,
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மாத்தளை, அம்பாறை, பதுளை, கம்பஹா, கொழும்பு, களுத்தறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படும்.
இதற்கிடையில், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், பொலன்னருவை, புத்தளம், குருநாகல், மற்றும் மொனராகலை மாவட்டங்களும் வெப்பமான வானிலை காரணமாக பாதிக்கப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பகுதிகளில் வெயிலில் தொடர்ந்து செயற்படுவதால் மக்கள் பாதிக்கப்படலாம்.
வெளியிடத்தில் வேலை செய்வோர் முடிந்தவரை அடிக்கடி நீரேற்றத்துடன் இருக்கவும், நிழலில் இடைவெளி எடுக்கவும் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.
வீட்டில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நோயுற்றவர்களின் நிலைமைகளை சரிபார்க்கவும், குழந்தைகளை கவனிக்குமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...

அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவி: வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்.

நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தத்தால் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வாகனங்கள்...

பாகிஸ்தான் கடல்சார் விவகாரங்களுக்கான அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பாகிஸ்தான் கடற்றொழில் மற்றும் (பெட்ரல் ) உள்ஆட்சி அமைச்சர் மொஹமட் ஜுனைத்...

பலத்த மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை.

மேற்கு, சபரகமுவ, தெற்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னலுக்கான செம்மஞ்சள்...