யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கொழும்பு உட்பட 13 மாவட்டங்களுக்கு கடுமையான எச்சரிக்கை

Date:

முல்லைத்தீவு, வவுனியா, புத்தளம், குருநாகல், அனுராதபுரம், பொலன்னருவை மற்றும் மொனராகலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெப்பமான காலநிலை மிக தீவிரமாக உள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த திணைக்களம் வெளியிட்ட வெப்பக் குறியீட்டின்படி,
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மாத்தளை, அம்பாறை, பதுளை, கம்பஹா, கொழும்பு, களுத்தறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படும்.
இதற்கிடையில், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், பொலன்னருவை, புத்தளம், குருநாகல், மற்றும் மொனராகலை மாவட்டங்களும் வெப்பமான வானிலை காரணமாக பாதிக்கப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பகுதிகளில் வெயிலில் தொடர்ந்து செயற்படுவதால் மக்கள் பாதிக்கப்படலாம்.
வெளியிடத்தில் வேலை செய்வோர் முடிந்தவரை அடிக்கடி நீரேற்றத்துடன் இருக்கவும், நிழலில் இடைவெளி எடுக்கவும் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.
வீட்டில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நோயுற்றவர்களின் நிலைமைகளை சரிபார்க்கவும், குழந்தைகளை கவனிக்குமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...