ராபிதா உலக முஸ்லிம் லீக்இன் புனித ரமழான் மாதத்திற்கான சமூகப் பணி ஆரம்பம்!

Date:

புனித மக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் “ராபிதாவின்”  உலக முஸ்லிம் லீக் அனுசரணையுடன் புனித ரமழானில் நாடு‌ முழுவதிலும் உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.அந்த வகையில் இன, மத பேதமின்றி மூவின மக்களுக்கும் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்படுகின்றன.

வறுமையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், கணவனை இழந்த பெண் குடும்ப தலைவிகளுக்கும் இவை வழங்கி வைக்கப்பட்டது.

மாளிகாவத்தை, வத்தளை,மாபோல, குருநாகல் போன்ற பிரதேசங்களில் இந்த பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.அத்தோடு தலா ஒரு குடும்பத்திற்கு ஆறாயிரம் ரூபா பெறுமதிமிக்க பொருட்கள் வழங்கி வருவதாகவும் இதுவரை 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த பொதிகள் வழங்கப்பட்டதாக ராபிதா அமைப்பின் சமூக சேவை பிரிவின் இலங்கைக்கான பிரதிநிதி தேசபந்து இம்ரான் ஜமால்டீன் தெரிவித்தார்.இந்த உதவி வழங்கும் நிகழ்வில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

‘Rebuilding Sri Lanka’ நிதியத்தில் வெளிநாட்டு வைப்பீடுகள் அதிகரிப்பு

‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உருவாக்கப்பட்டுள்ள ‘Rebuilding...

நாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்!

ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர்,...

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ...

நாச்சியாதீவு மக்களுக்கு சிங்கள சகோதரர்களது மனிதாபிமான உதவி

நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் அனுராதபுர மாவட்டத்தின் பெரிய கிராமங்களில் ஒன்றான...