இந்தியாவில் ஒரே நாளில் மூன்று லட்சம் கொரோணா தொற்றாளர்கள் இனம்காணப்பட்டனர்

Date:

இந்தியாவில் கொரோணா பரவல் மிகவும் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இன்று புதன் கிழமை காலை வெளியாகி உள்ள தகவல்களின் படி புதிதாக மூன்று லட்சம் தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்துக்குள் இனம் காணப்பட்ட ஆகக் கூடுதலான தொகை இதுவாகும்.

இதன் படி இந்தியாவில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1கோடி 56 லட்சத்து 9ஆயிரத்து நான்கு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கொவிட்-19 காரணமாக இந்தியாவில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 24 மணிநேரத்தில் 2020 ஆகவும் அதிகரித்துள்ளது.

மொத்தமாக மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 570 ஆகும். இந்தியாவில் கொரோணா இரண்டாவது அலை மிக மோசமான கட்டத்துக்கு வந்துள்ளது. புதுடில்லி, மும்பாய் அஹமதாபாத், லக்னோ, போபால், கொல்கத்தா, அலஹாபாத், சூரத் ஆகிய நகரங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நகரங்களில் ஆஸ்பத்திரிகளில் சமாளிக்க முடியாத அளவுக்கு பெரும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...