ஓய்வுபெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சி மக்களும் இறுதி அஞ்சலி

Date:

ஓய்வுபெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சி மக்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள தூய முழங்காவில் மாதா ஆலய முன்றலில் இறுதி அஞ்சலிக்கான சிறப்பு ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. யாழ்பாணத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வுகளும், வழிபாடும் இடம்பெற்றதை தொடர்ந்து ஆயரின் திருவுடல் மன்னார் எடுத்து செல்லப்பட்டது. இந்த நிலையில் யாழ் மன்னார் வீதியில் குறித்த விசேட அஞ்சலி நிகழ்வு ஏற்பர்டு செய்யப்பட்டிருந்தது.

இதன்புாது அப்பகுதியில் கூடியிருந்த மக்கள் மாலை அணிவித்தும், மலர்தூவியும் இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர். அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், சார்ள்ஸ்நிர்மலநாதன் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

தொடர்ந்து ஆயரின் திருவுடல் வாகன பேரணியுடன் மன்னார் நோக்கி பயணித்திருந்தது.

 

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...