தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரம் நோக்கி நீச்சல் பயணத்தை ஆரம்பித்த இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர்

Date:

இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர்  ரோசன் அபேசுந்தர பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை இன்று (10)   சனிக்கிழமை அதிகாலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பித்துள்ளார்.
-இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவரின் 50 வருடங்கள் பழமையான கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர்  ரோசன் அபேசுந்தர நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகின்றது.
இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தலைமன்னார் இறங்கு துறையில் இருந்து  பாக்கு நீரிணையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
-குறித்த விமானப்படை வீரர் இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில் பாக்கு நீரினை ஊடாக தனுஸ் கோடியை சென்றடைவார்.
-பின்னர் அங்கிருந்து மீண்டும் தலைமன்னார் நோக்கி வருகை தர உள்ளார்.
குறித்த வீரர் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மீண்டும் தலைமன்னாரை வந்தடைவார் என தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் நிருபர்

Popular

More like this
Related

மீண்டும் கொழும்பு வர விசேட போக்குவரத்து சேவை

புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் கொழும்புக்கு திரும்புவதை முன்னிட்டு...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட பேருந்து...

107 வயது வரை வாழ்ந்த மூதாட்டி ஹஸீனா உம்மா காலமானார்!

தென் மாகாணத்தின் பெலிகம, கடையவத்த பகுதியைச் சேர்ந்த ஹஸீனா உம்மா என்ற...