இந்திய உப கண்டம் ஈன்றெடுத்த ஒரு தனித்துவமான இஸ்லாமிய அறிஞர் மௌலானா வஹீதுத்தீன் கான். அஷ்ஷெய்க். ஏ. சீ. அகார் முஹம்மத் அவர்கள் அனுதாபம்.

Date:

முஸ்லிம் உலகம் மற்றுமோர் இஸ்லாமிய ஆளுமையை வழியனுப்பியது; இந்திய உப கண்டம் ஈன்றெடுத்த ஒரு தனித்துவமான இஸ்லாமிய அறிஞரே மௌலானா வஹீதுத்தீன் கான் அவர்கள்.

அவர் ஒரு பன்முக ஆளுமை; ஒரு சிந்தனையாளர்; எழுத்தாளர்; பேச்சாளர்; அனைத்துக்கும் மேலாக ஒரு சிறந்த அழைப்பாளர்.

அவரது சில சிந்தனைகளுடனும் நிலைப்பாடுகளுடனும் முரண்படுவோரும் அவரது அறிவாளுமையை, சிந்தனா ஆற்றலை, இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்திற்கான அவரது பங்களிப்பை அங்கீகரிக்கத் தவறுவதில்லை.

தனது இலட்சியப் பணியை தொடரக்கூடிய ஒரு சீடர் பரம்பரையை அன்னார் உருவாக்கிவிட்டே பயணித்திருக்கின்றார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் நற்காரியங்களை ஏற்று, பாவங்களை மன்னித்து உயர் சுவன வாழ்வை வழங்குவானாக!

மௌலானாவின் பணியை தொடரும் உணர்வையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அவர்களின் மாணாக்கர்களுக்கும் தொண்டர்களுக்கும் வழங்கியருள்வானாக!

அஷ்ஷேக் அகார் முஹம்மத்

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...