வெலிகந்த பிரதேச சபையின் தலைவர் பிரியந்த காவிந்த அபேசூரியவை பதவி நீக்கி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண ஆளுநர் மஹீபால ஹேரத்தினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
வெலிகந்த பிரதேச சபையின் தலைவர் பிரியந்த காவிந்த அபேசூரியவினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சில குற்றங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டமைக்கு அமைய அவர் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.