ஹிருணிகாவின் கோரிக்கைக்கு அமைய புதுக்கடைநீதிமன்ற கட்டிடத் தொகுதியில் தாய் பாலூட்டும் நிலையம்

Date:

ஹிருணிகாவின் கோரிக்கைக்கு அமைய
புதுக்கடைநீதிமன்ற கட்டிடத் தொகுதியில்
தாய் பாலூட்டும் நிலையங்கள் ஸ்தாபிப்பு

புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் தாய் பாலூட்டும் நிலையங்கள் ஸ்தாபிப்பு
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இரண்டு தாய் பாலூட்டும் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் தாய் பாலுட்டும் தாய்மார்கள் பயன்படுத்துவதற்காக நீதி அமைச்சினால் இந்த அறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற வளாகத்தில் தாய் பாலூட்டும் நிலையங்களின்மையினால் தனக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி, ஹிருணிகா பிரேமசந்திர உறுமொழி வழங்கியிருந்தார். இதற்கமையவே குறித்த தாய்ப் பாலுட்டும் நிலையங்கள் விசேடமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் தங்கவைக்கப்பட்டிருந்த 236 ஈரான் கடற்படையினர் நாடு திரும்பினர்

இலங்கையின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த மொத்தம் 240 வீரர்களும்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின் மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மாகாணங்களிலும்...

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...