136 மில்லியன் ரூபா நாணயச் சலவை மோசடியில் ஈடுபட்ட 27வயது நபர் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது

Date:

பாதாள குழு ஒன்றின் தலைவர் தர்ம சிறி பெரேரா அல்லது தர்மே என அழைக்கப்படும் நபரின் 136 மில்லியன் ரூபா பணத்தை தனது வங்கிக் கணக்கில் வைத்திருந்ததாகக் கூறப்படும் 27 வயது நபரை குற்றத் தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தர்மே எனப்படும் பாதாள உலகத் தலைவர் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனன்ஜய டி சில்வாவின் தந்தையின் கொலை உட்பட பல குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்படும் ஒருவராவார். இவர் தற்போது துபாயில் தலைமறைவாகி தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இரத்மலானையில் வசிக்கும் 27வயது நபர் ஒருவரின் வங்கிக் கணக்கில் தர்மே என்பருக்கு சொந்தமான பணம் வைப்பில் உள்ளமை பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது. இந்தப் பணம் சட்டவிரோதாமான முறையில் உழைத்த பணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...