136 மில்லியன் ரூபா நாணயச் சலவை மோசடியில் ஈடுபட்ட 27வயது நபர் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது

Date:

பாதாள குழு ஒன்றின் தலைவர் தர்ம சிறி பெரேரா அல்லது தர்மே என அழைக்கப்படும் நபரின் 136 மில்லியன் ரூபா பணத்தை தனது வங்கிக் கணக்கில் வைத்திருந்ததாகக் கூறப்படும் 27 வயது நபரை குற்றத் தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தர்மே எனப்படும் பாதாள உலகத் தலைவர் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனன்ஜய டி சில்வாவின் தந்தையின் கொலை உட்பட பல குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்படும் ஒருவராவார். இவர் தற்போது துபாயில் தலைமறைவாகி தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இரத்மலானையில் வசிக்கும் 27வயது நபர் ஒருவரின் வங்கிக் கணக்கில் தர்மே என்பருக்கு சொந்தமான பணம் வைப்பில் உள்ளமை பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது. இந்தப் பணம் சட்டவிரோதாமான முறையில் உழைத்த பணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...