18 வயதான யுவதி, கொவிட் தொற்றில் உயிரிழப்பு  

Date:

வத்தளை பகுதியைச் சேர்ந்த 18 வயதான யுவதியொருவர், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

வத்தளை ஹேமாஸ் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த யுவதி, கடந்த 21ம் திகதி உயிரிழந்துள்ளார்.

இருதய நோய்யுடன், கொவிட் நியூமோனியா ஏற்பட்டமையே, இந்த உயிரிழப்புக்கான காரணம் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புடன், மேலும் மூன்று உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஆண்ணொருவரும், பன்னிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஆண்ணொருவரும், மஹரகம பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக 638 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல இடங்களில் பலத்த மழை!

மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது...

பங்களாதேஷ் பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!

பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று ( 12) நடைபெற்றது. முன்னாள்...

கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022...