2020ம் ஆண்டில் உலகில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாடுகளில் முதல் நான்கு இடங்களிலும் மத்திய கிழக்கு நாடுகளே உள்ளன

Date:

2020ம் ஆண்டில் உலகில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாடுகளில் முதல் நான்கு இடங்களிலும் மத்திய கிழக்கு நாடுகளே உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான், எகிப்து, ஈராக், சவூதி அரேபியா ஆகிய நாடுகளே மரண தண்டனை நிறைவேற்றுவதில் முன்னணியில் உள்ள நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 483 மரண தண்டனைகளில் 88 வீதமான மரண தண்டனைகள் இந்த நாடுகளில் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. மனித உரிமை குழுக்களை மேற்கோள் காட்டி சர்வதேச மன்னிப்புச் சபை இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் ஆள்கொல்லி வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாக்கப் போராடி வந்த ஒரு கால கட்டத்தில் இந்த நாடுகள் மரண தண்டனையை நிறைவேற்றி வந்துள்ளமை கவலைக்குரியது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதே காலப்பகுதியில் சீனாவில் உய்குர் இன முஸ்லிம்கள் மீதும் ஏனைய அரச அதிருப்தியாளர்கள் மீதும் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. சட்ட விரோத மரண தண்டனைகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அது பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையில் ஒரு வார்த்தைக் கூடக் குறிப்பிடப்படாமை அவதானிக்கத்தக்கதாகும்.

சீனா வருடாந்தம் பெருமளவான மரண தண்டனைகளை நிறைவேற்றி வருகின்றது. வட கொரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலும் இது நடக்கின்றது. ஆனால் அவை தொடர்பான எந்தத் தரவுகளும் வெளியிடப்படுவதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

அரச செலவுகளை முகாமைத்துவம் செய்ய சுற்றுநிரூபம்!

மத்திய கிழக்கு  போர்ச் சூழலினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தணித்து,...

“ஹார்முஸ் நீரிணை ஈரான் ஒத்துழைப்புடன் மட்டுமே திறக்கப்பட வேண்டும்”: பிரான்ஸ் ஜனாதிபதி

சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் பிரான்ஸ்...

மக்காவில் உள்ள ராபிதாவின் அனுசரணையில் உயர்கல்வி கற்ற இரட்டை சகோதரிகளுக்கு உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகள்

இம்ரான் ஜமால்தீன் பணிப்பாளர், ராபிதாவுக்கான (MWL) இலங்கை பிரதிநிதி. மக்காவில் உள்ள ராபிதாவின் (MWL) அனுசரணையில்...

எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம்: ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மாற்றம்!

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள்...