இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மூன்று லட்சம் புதிய கொரோணா தொற்றாளர்கள்

Date:

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் 3 லட்சத்தை தாண்டியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று காலை வெளியாகியுள்ள தகவல்களின்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிய கொரோணா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் அமெரிக்காவில் புதிய தொ ற்றாளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரத்து 430 ஆக காணப்பட்டது.

தற்போது இந்தியாவில் அதைவிட புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடி 59 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பிரேசிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலைக்கு இந்தியா வந்துள்ளது. தினசரி மரணங்களின் எண்ணிக்கையும் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 104 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது .

இந்தியாவில் தற்போது பரவி வருவது இரட்டை உருமாற்ற வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது சூப்பர் பரவல் வேகம் கொண்டது அதாவது அதிகமான பரவல் வேகம் கொண்டது என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் நிலைமை நாளுக்கு நாள் இந்தியாவில் மோசமடைய தொடங்கியுள்ளது. சில வைத்திய சாலைகளில் வைத்தியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறும் நிலைக்கு தள்ளப்பட்டு ள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...