இந்தியாவில் மீண்டும் தீவிரமடையும் கொரோணா

Date:

இன்று காலை வெளியாகி உள்ள சில தகவல்களின் படி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லடசத்து 15 ஆயிரத்து 736 அக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொவிட் 19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12.8 மில்லியனாகக் (ஒரு கோடி 28 லட்சம்) காணப்படுகின்றது.

உலகில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேஸில் ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 1லட்சத்து 66 ஆயிரத்து 177 கொவிட் மரணங்கள் சம்பவித்துள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 630 மரணங்கள் சம்பவித்துள்ளன.

இந்தப் புதிய நோய்ப்பரவல் தாக்கத்தை அடுத்து இந்திய தலைநகர் புதுடில்லியில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏனைய மாநிலங்களிலும் உள்ளுர் அதிகாரிகள் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான கண்டிப்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...