யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கொழும்பு உட்பட 13 மாவட்டங்களுக்கு கடுமையான எச்சரிக்கை

Date:

முல்லைத்தீவு, வவுனியா, புத்தளம், குருநாகல், அனுராதபுரம், பொலன்னருவை மற்றும் மொனராகலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெப்பமான காலநிலை மிக தீவிரமாக உள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த திணைக்களம் வெளியிட்ட வெப்பக் குறியீட்டின்படி,
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மாத்தளை, அம்பாறை, பதுளை, கம்பஹா, கொழும்பு, களுத்தறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படும்.
இதற்கிடையில், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், பொலன்னருவை, புத்தளம், குருநாகல், மற்றும் மொனராகலை மாவட்டங்களும் வெப்பமான வானிலை காரணமாக பாதிக்கப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பகுதிகளில் வெயிலில் தொடர்ந்து செயற்படுவதால் மக்கள் பாதிக்கப்படலாம்.
வெளியிடத்தில் வேலை செய்வோர் முடிந்தவரை அடிக்கடி நீரேற்றத்துடன் இருக்கவும், நிழலில் இடைவெளி எடுக்கவும் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.
வீட்டில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நோயுற்றவர்களின் நிலைமைகளை சரிபார்க்கவும், குழந்தைகளை கவனிக்குமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...