யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கொழும்பு உட்பட 13 மாவட்டங்களுக்கு கடுமையான எச்சரிக்கை

Date:

முல்லைத்தீவு, வவுனியா, புத்தளம், குருநாகல், அனுராதபுரம், பொலன்னருவை மற்றும் மொனராகலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெப்பமான காலநிலை மிக தீவிரமாக உள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த திணைக்களம் வெளியிட்ட வெப்பக் குறியீட்டின்படி,
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மாத்தளை, அம்பாறை, பதுளை, கம்பஹா, கொழும்பு, களுத்தறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படும்.
இதற்கிடையில், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், பொலன்னருவை, புத்தளம், குருநாகல், மற்றும் மொனராகலை மாவட்டங்களும் வெப்பமான வானிலை காரணமாக பாதிக்கப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பகுதிகளில் வெயிலில் தொடர்ந்து செயற்படுவதால் மக்கள் பாதிக்கப்படலாம்.
வெளியிடத்தில் வேலை செய்வோர் முடிந்தவரை அடிக்கடி நீரேற்றத்துடன் இருக்கவும், நிழலில் இடைவெளி எடுக்கவும் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.
வீட்டில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நோயுற்றவர்களின் நிலைமைகளை சரிபார்க்கவும், குழந்தைகளை கவனிக்குமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...