அலுவலக அடையாள அட்டை அல்லது உயர் அதிகாரியின் கடிதத்தைக் காண்பித்து மாகாணங்களுக்கிடையில் பயணிக்க முடியும்

Date:

ஆகக் குறைந்த பணியாளர்களுடன் அரச அலுவலகங்கள் இன்று முதல் இயங்கும்.

ஆகக் குறைந்த மற்றும் அத்தியவசிய பணியாளர்களுடன் அரச அலுவலகங்கள் இன்று முதல் இயங்கும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

அரச நிறுவனங்களுக்கு பணியாளர்களை அழைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் குறித்து கடந்த வாரம் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதன் படி அரச ஊழியர்களை பணிக்கு அழைத்தல் நடைபெறும் என அமைச்சு அறிவித்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையில் பயணிப்போர் திணைக்கள மற்றும் நிறுவனத் தலைவர் அல்லது உயர் அதிகாரி வழங்கும் கடிதத்தை காண்பித்து பயணிக்க முடியும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

அல்லது அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து பயணம் செய்ய முடியும் எனவும் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

புதிய சட்ட விதிகள்: பஸ் சாரதிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை.

பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய சட்டவிதிகள் மற்றும் பரிசோதனைகள்...

கலஹா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை

கண்டி, கலஹா பகுதியிலுள்ள கோவிலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட மர்மக்கல், சந்தை மதிப்பில்லாத...

IMF பிரதிநிதிகள் இன்று நாட்டிற்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உண்மையைக் கண்டறியும் குழுவொன்று இன்று (22)...

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க துருக்கி இணக்கம்.

இலங்கைக்கான  துருக்கி தூதுவர் கலாநிதி செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü...