இந்தியாவிலிருந்து 35 பேருடன் இலங்கை வந்த விமானம்

Date:

இந்தியாவின் டெல்லியில் இருந்து 35 பேருடன் இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் குறித்த இந்திய விமானம் இன்று(19) அதிகாலை நாட்டுக்கு வந்துள்ளது.

ஏர் இண்டியா விமான சேவைக்கு சொந்தமான இவ்விமானத்தில் 19 இலங்கையர்களும், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் 16 உத்தியோகத்தர்களும் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, இந்தியாவில் இருந்து பயணிகள் விமானங்கள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சின் விசேட அனுமதியுடன் இந்த விமானம் இலங்கை வந்துள்ளதுடன், இவ்வாறு வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...