இம்முறையும் பெருநாள் தொழுகை வீட்டிலேயே | பள்ளிவாசல்கள், பொது இடங்களில் அனுமதி இல்லை

Date:

நோன்புப் பெருநாள் தொழு­கையை பள்­ளி­வா­சல்­க­ளிலோ அல்­லது பொது இடங்­க­ளிலோ கூட்­டாக நிறை­வேற்ற முடி­யாது என்றும் வீட்டிலேயே தொழு­து­ கொள்­ளு­மாறும் வக்பு சபை அறி­வுறுத்தியுள்ளது.

ஏற்­க­னவே அமு­லி­லுள்ள சுகா­தார வழி­காட்­டல்­க­ளுக்­க­மை­யவே நோன்புப் பெருநாள் தினத்­தன்றும் முஸ்­லிம்கள் நடந்துகொள்ள வேண்டும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

‘‘பள்­ளி­வா­சல்­களில் தராவிஹ், ஜும்ஆ, பெருநாள் தொழுகை ஆகிய கூட்­டுத் ­தொ­ழு­கை­களை தொழ முடி­யாது. பள்­ளி­வா­சல்­களில் தனித்தனியே ஒரே தட­வையில் தொழு­வது 25 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்­ளது.

சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனவின் சுற்று நிரு­பத்தில் இது பற்றி தெளி­வாகக் குறிப்பிடப்பட்­டுள்­ளது’’ என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நன்றி விடிவெள்ளி

 

 

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...