நாட்டில் நேற்றைய தினத்தில் (18) மாத்திரம் 33,017 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 457,840 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் 5,229 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை 297,686 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் 17 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், இதுவரை 14,917 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.