இஸ்ரேல் தாக்குதலில் இன்று மேலும் 20க்கும் அதிகமானவர்கள் மரணம்!

Date:

காசா பிரதேசத்திலுள்ள ஷாட்டிஅகதிமுகாமில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல் காரணமாக 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நேற்று இரவு(14) இடம்பெற்றுள்ளது.

இன்று நண்பகல் வரை இந்த தாக்குதலில் சிக்குண்டு மரணமடைந்தவர்களின் சடலங்களை கண்டுபிடிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன .

இதுவரை குறைந்தபட்சம் பத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் எட்டு சடலங்கள் சிறுவர்கள் உடையது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன மேலும் பலர் இந்த விமானத் தாக்குதலில் சிக்குண்டு மரணம் அடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

 

தற்போது இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக ஷாட்டி அகதி முகாமுக்குள் தஞ்சம் புகுந்திருந்த மக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் விமானப்படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதேவேளை மேட்குக்கரை பிரதேசத்தில் பலஸ்தீன மக்கள் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் வீதிகளில் இறங்கியுள்ளனர்.
தம்மை எதிர்கொண்டு வரும் யுத்த தாங்கிகளையும் முழு கவசம் அணிந்த படைவீரர்களையும் வெறும் கற்களை கொண்டு அவர்கள் எதிர்த்து நிற்கின்றனர். இன்று நண்பகள் கிடைத்துள்ள தகவல்களின்படி இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்ட 11 பலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம்  சுட்டுக் கொன்றுள்ளது .

Popular

More like this
Related

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கான 2026 திட்டங்கள்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம்...

இனிமேல் அமைதியைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற கடமை எனக்கு இல்லை: அமெரிக்க ஜனாதிபதி.

இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று நோர்வே பிரதமருக்கு...

பாகிஸ்தானில் கல்வி பயின்று திரும்பிய இலங்கை மாணவர்களுக்கு விசேட வரவேற்பு.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், பாகிஸ்தானில் அண்மையில் தமது கல்வியை நிறைவு செய்து...

மோசமான நிலையில் காற்றின் தரம்: சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம்.

நாட்டின் சில பகுதியில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார...