எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் விசாரணையை முன்னெடுக்க 10 அதிகாரிகள் கொண்ட குற்றப்புலனாய்வு குழு

Date:

கொழும்பு துறைமுக பகுதியில் எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விடயம் தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணையை முன்னெடுக்க 10 அதிகாரிகள் கொண்ட குற்றப்புலனாய்வு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் கேப்டன் மற்றும் தலைமை பொறியிலாளரிடம் வாக்குமூலம் இன்று(31) பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த விசாரணை வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஹோட்டலில் வைத்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

மேலும், கப்பலின் பணியாளர் குழுவினரிடம் எதிர்வரும் நாட்களில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...