ஏப்ரல் மாதத்துக்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரராக பாபர் அசாம்

Date:

ஐ.சி.சி. ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த விருதினை வென்ற வீரர்களின் பெயர் விபரங்களை நேற்யை தினம் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

2021 ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரராக பாகிஸ்தான் அணித் தலைவரும், ஒரு நாள் போட்டியில் துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான பாபர் அசாம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரில் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் அவரது நிலையான மற்றும் சிறப்பான துடுப்பாட்டத்திற்காக ரசிகர்கள் மற்றும் ஐ.சி.சி வாக்களிக்கும் அகாடமியால் ஏப்ரல் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2021 ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக அவுஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

ஹீலி நியூசிலாந்திற்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடினார், 51.66 சராசரி மற்றும் 98.72 ஸ்ட்ரைக் வீதம் 155 ஓட்டங்கள் பெற்றார்.

நியூசிலாந்திற்கு எதிரான அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றியில் முன்னணி ஓட்ட அடித்த வீரராக அவரது முயற்சிகள் காணப்பட்டன.

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் மாதாந்தம் சிறந்த வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்கத்கது.

Popular

More like this
Related

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...