கொட்டாவ, கடுவெல நுழைவாயில்கள் மீண்டும் திறப்பு!

Date:

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ மற்றும் கடுவெல பகுதிகளிலுள்ள 8 நுழைவாயில்கள் இன்று (14) முதல் மீள திறக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அதிவேக நெடுஞ்சாலையின் பாராமரிப்பு மற்றும் நடவடிக்கை பதில் பணிப்பாளர் நிஹால் லொட்விக் தெரிவிக்கையில் , கடுவெல பகுதியிலுள்ள உட்பிரவேசிக்கும் 2 நுழைவாயில்களும் வெளியேறும் 02 நுழைவாயில்களும், கொட்டாவ பகுதியிலுள்ள உட்பிரவேசிக்கும் 02 நுழைவாயில்களும், வெளியேறும் 2 நுழைவாயில்களும் திறக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

தெற்கு அதிவேக வீதியில் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ள கொத்தலாவல, வெலிபென்ன மற்றும் இமதுவ ஆகிய பகுதிகளிலுள்ள நுழைவாயில்களையும் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...