சேதனப் பசளைக்கு மாறும் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம் ரசாயனப் பசலைகள் திருப்பி அனுப்பப்பட்டன!

Date:

 

எதிர்வரும் காலங்களில் இரசாயனப் பசளைகள் பாவிப்பதில்லை என்றும் விவசாயிகள் சேதனப் பசளைக்கு திரும்ப வேண்டும் என்றும் ஜனாதிபதி எடுத்துள்ள முடிவின் காரணமாக சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட சுமார் 18 ஆயிரம் மெட்ரிக் தொன் இரசாயனப் பசளைகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின்இந்த முடிவு ஒரு நல்ல முடிவாக இருந்தபோதிலும் உடனடியாக அது சாத்தியப்படுமா என விவசாய சமூகம் கேள்வி எழுப்பி உள்ளது. தற்போதைய நிலையில் பசளை தேவையை சேதனப் பசளைகளால் முழுமையாக பூர்த்தி செய்ய முடியுமா என்பது சந்தேகம் ஆனது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இது மட்டுமன்றி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே ரசாயன பசலைகளை தருவிப்பதற்கான எந்த வசதிகளையும் கம்பெனிகளுக்கு வழங்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் பிரகாரம் ரசாயன பசலைகளின் இறக்குமதி தற்போதைக்கு தடைப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும் அளவுக்கு சேதனப் பசளை நாட்டில் கையிருப்பில் உள்ளதா என்பது குறித்து விவசாயிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்

Popular

More like this
Related

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...