தம் மீதான தடையை மீளாய்வு செய்யுமாறு கோரி முஸ்லிம் அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

Date:

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ், இலங்­கையில் தடை செய்யப்பட்­டுள்ள முஸ்லிம் அமைப்­புக்­களில் பல, தம் மீதான தடையை மீள் பரி­சீ­லனை செய்­யு­மாறு கோரி ஜனா­தி­ப­திக்கு தனித் தனி­யாக கோரிக்கை கடி­தங்­களை அனுப்­பி­யுள்­ளன.

நேற்றுமுன்தினம் மாலை­ வரை மூன்று அமைப்­புக்கள் இவ்­வாறு மீள் பரிசீலனை கோரி கடி­தங்­களை அனுப்­பி­யுள்­ளமை உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் சில அமைப்­புக்கள் அதற்­கான நடவ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்­த­மையை உறுதி செய்ய முடிந்­தது.

தடையை எதிர்த்து உயர் நீதி­மன்றில் வழக்குத் தொடுக்க முன்னர் இவ்­வா­றான ஒரு மீள் பரி­சீ­லனை தொடர்பில் ஜனா­தி­ப­தி­யிடம் கோரி­யுள்­ள­தாக, மீளாய்வு கோரி கடிதம் அனுப்­பி­யுள்ள அமைப்பொன்றின் முக்­கி­யஸ்தர் தெரி­வித்தார்.

அதன்­படி சி.டி.ஜே எனும் சிலோன் தெளஹீத் ஜமாஅத், ஐக்­கிய தௌஹீத் ஜமாஅத் (யூ.டி.ஜே.), அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ஏ.சி.டி.ஜே.) ஆகிய அமைப்­புக்கள் ஜனா­தி­ப­திக்கு மீள் பரி­சீ­லனை கோரி கடி­தங்­களை அனுப்­பி­யுள்­ளன.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் (எஸ்.எல்.டி.ஜே.) ஜம்­மி­யதுல் அன்­ஸாரி சுன்­னதுல் மொஹ­ம­தியா (ஜே.ஏ.எஸ்.எம்.) போன்ற அமைப்­புக்­களும் இவ்­வா­றான முயற்­சி­களில் ஈடு­பட்­டு­ள்ள­தாக அறிய முடி­கின்­றது.

நாட்டின் சமா­தா­னத்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு, பொது­மக்கள் ஒழுங்கு மற்றும் சட்­ட­வாட்­சியின் நலனில் அர­சாங்­கத்தின் முயற்­சி­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக அடிப்படைவாதத்­துடன் தொடர்­பு­டைய 11 அமைப்­பு­களை தடை செய்­வ­தாக கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி அதி­வி­சேட வர்த்­த­மா­னியை வெளி­யிட்டு அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாதத் தடுப்பு (தற்­கா­லிக ஏற்­பா­டுகள்) சட்­டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் 2021 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஒழுங்கு விதி­க­ளுக்­க­மைய குறிப்­பிட்ட 11 அமைப்­பு­களும் தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக வர்த்­த­மானி அறி­வித்­தலில் சுட்டிக்காட்டப்­பட்­டுள்­ளது.

நன்றி விடிவெள்ளி

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...