தரம் 1 மாணவர் அனுமதிக்கான திருத்தங்களுடனான சுற்றுநிருபம் இன்று அமைச்சரவைக்கு

Date:

தரம் 1 இல் 40 மாணவர்களை அனுமதிக்கும் திருத்தத்துடன் அடுத்த வருடம் தரம் ஒன்றில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான புதிய சுற்றறிக்கை இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்திற்கு மேலதிகமாக வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் மற்றும் வேறு சில மாற்றங்கள் உள்ளடக்கியதாக புதிய சுற்றுநிருபம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

தரம் 1க்கான அனுமதிக்காக அடுத்த மாத ஆரம்பம் முதல் விண்ணப்பம் கோரப்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

5 வருடங்களுக்கு முன்னர் உயர் நீதி மன்றம் வழங்கிய ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் மாத்திரமே இருக்கலாம் என்ற தீர்ப்பை பிரபல்யப் பாடசாலைகளில் மாத்திரம் சற்று மாற்றியமைத்து 40 ஆக அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

QR குறியீட்டை பழைய பயனர்கள் தடையின்றிப் புதுப்பித்துக் கொள்ளலாம்!

ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் தற்போதும் அதே வாகனம்...

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...