தரம் 1 மாணவர் அனுமதிக்கான திருத்தங்களுடனான சுற்றுநிருபம் இன்று அமைச்சரவைக்கு

Date:

தரம் 1 இல் 40 மாணவர்களை அனுமதிக்கும் திருத்தத்துடன் அடுத்த வருடம் தரம் ஒன்றில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான புதிய சுற்றறிக்கை இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்திற்கு மேலதிகமாக வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் மற்றும் வேறு சில மாற்றங்கள் உள்ளடக்கியதாக புதிய சுற்றுநிருபம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

தரம் 1க்கான அனுமதிக்காக அடுத்த மாத ஆரம்பம் முதல் விண்ணப்பம் கோரப்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

5 வருடங்களுக்கு முன்னர் உயர் நீதி மன்றம் வழங்கிய ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் மாத்திரமே இருக்கலாம் என்ற தீர்ப்பை பிரபல்யப் பாடசாலைகளில் மாத்திரம் சற்று மாற்றியமைத்து 40 ஆக அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...

பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...