தாக்குதல் தொடரும் – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு..!

Date:

காஸா மீதான தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு எச்சரித்துள்ள நிலையில், இது குறித்து அவசரமாக ஆலோசிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீன ஹமாஸ் உள்ளிட்ட போராளி குழுக்களுக்கும் இடையேயான மோதல் 7 ஆவது நாளாக நீடிக்கிறது. ஜெருசலேமில் உள்ள மஸ்ஜிதுல் அக்சாவில் இருந்து பாலஸ்தீனியர்களை விரட்டிய இஸ்ரேல் ராணுவத்தின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டெல் அவிவ் மற்றும் பீர்ஷெபா (Beersheba) நகரங்களின் மீது ஹமாஸ் போராளிகள் ராக்கெட்டுகளை வீசினர்.

அதைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் காஸா நிலப்பகுதி மீதி சரமாரியாக வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் 41 குழந்தைகள் உள்பட பாலஸ்தீனர்கள் 149 பேர் கொல்லப்பட்டனர்.

காஸாவின் முக்கிய கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. பதிலுக்கு ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இன்று காலை காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் வீடு தரைமட்டமாக்கப்பட்டது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று காலை டெல் அவிவ் நகரை நோக்கி ஹமாசின் ராக்கெட்டுகள் பறந்தன.

இந்த நிலையில் தொலைக்காட்சியில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, காஸா மீதான தாக்குதல் தொடரும் என கூறினார்.

ஆனால், ஹமாஸ் போலன்றி தாங்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என அவர் பேசினார். இதனிடையே, மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா. ஐ.நா மற்றும் எகிப்து தூதர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் எந்த பலனும் தராத நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவரசமாக கூடி நிலைமையை பற்றி விவாதிக்க உள்ளது.

இந்த மோதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மிகுந்த கவலை தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, பாலஸ்தீன் அதிபர் முஹம்மது அப்பாஸ் ஆகியோருடன் அவர் தொலை பேசியில் பேசினார். அப்போது ஹமாஸ் தனது தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் முஹம்மது அப்பாசிடம் கேட்டுக் கொண்டார்.

Popular

More like this
Related

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கான 2026 திட்டங்கள்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம்...

இனிமேல் அமைதியைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற கடமை எனக்கு இல்லை: அமெரிக்க ஜனாதிபதி.

இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று நோர்வே பிரதமருக்கு...

பாகிஸ்தானில் கல்வி பயின்று திரும்பிய இலங்கை மாணவர்களுக்கு விசேட வரவேற்பு.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், பாகிஸ்தானில் அண்மையில் தமது கல்வியை நிறைவு செய்து...

மோசமான நிலையில் காற்றின் தரம்: சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம்.

நாட்டின் சில பகுதியில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார...