தியகல பகுதியில் மண்சரிவு!

Date:

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணத்தால் குறித்த வீதியில் வாகன போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் தடைப்பட்டதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக இன்று (13) மாலை 06 மணி அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களும், பொலிஸாரும் மண்மேட்டை பகுதி அளவில் அகற்றிய பின் 07 மணிக்கு பின்னர் ஒரு வழி போக்குவரத்து இடம்பெறுகின்றது.

எனினும், வாகன சாரதிகள் மிக அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...