தியகல பகுதியில் மண்சரிவு!

Date:

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணத்தால் குறித்த வீதியில் வாகன போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் தடைப்பட்டதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக இன்று (13) மாலை 06 மணி அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களும், பொலிஸாரும் மண்மேட்டை பகுதி அளவில் அகற்றிய பின் 07 மணிக்கு பின்னர் ஒரு வழி போக்குவரத்து இடம்பெறுகின்றது.

எனினும், வாகன சாரதிகள் மிக அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...