பயணத்தடையில் மாற்றம் – அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்!

Date:

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 25ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் தளர்த்தப்படும் என அரசாங்கம் முன்னர் அறிவித்த தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அதில், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இடைவௌி அற்ற பயணத்தடையை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதனால் எதிர்வரும் 25ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் வீட்டுக்கு ஒருவர் மாத்திரமே வௌியில் செல்ல முடியும் எனவும் அன்றைய தினம் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை பயணத்தடை தளர்த்தப்படுமே தவிர நீக்கப்படாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...