பாகிஸ்தானில் 9 நாள் முடக்க நிலை பிரகடனம்!

Date:

பாகிஸ்தானிலும் தற்போது covid-19 தாக்கம் வேகமாக அதிகரித்து வருவதால் எதிர்வரும் ரமழான் பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஒன்பது நாள் முடக்க நிலை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் இந்த ஒன்பது நாள் முடக்க நிலை அமல்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது .

சுற்றுலாத் துறை உட்பட மக்களுடைய அன்றாட போக்குவரத்துக்கள் கூட இதன் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் கொவிட் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது பாகிஸ்தானுக்குள்ளும் அது வேகமாகப் பரவக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும். எனவே ஒரு முன்னேற்பாடு கருதியே இந்த பண்டிகை கால முடக்க நிலையை அமுலுக்கு கொண்டு வருவதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது

இதன்மூலம் பண்டிகைக்கால பொருள்கள் கொள்வனவு முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...