பாகிஸ்தானில் 9 நாள் முடக்க நிலை பிரகடனம்!

Date:

பாகிஸ்தானிலும் தற்போது covid-19 தாக்கம் வேகமாக அதிகரித்து வருவதால் எதிர்வரும் ரமழான் பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஒன்பது நாள் முடக்க நிலை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் இந்த ஒன்பது நாள் முடக்க நிலை அமல்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது .

சுற்றுலாத் துறை உட்பட மக்களுடைய அன்றாட போக்குவரத்துக்கள் கூட இதன் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் கொவிட் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது பாகிஸ்தானுக்குள்ளும் அது வேகமாகப் பரவக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும். எனவே ஒரு முன்னேற்பாடு கருதியே இந்த பண்டிகை கால முடக்க நிலையை அமுலுக்கு கொண்டு வருவதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது

இதன்மூலம் பண்டிகைக்கால பொருள்கள் கொள்வனவு முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது

Popular

More like this
Related

நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள்...

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே.க. அறிக்கை

சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலையைக் கண்டித்து ஐக்கிய...

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு!

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை (பிப். 17) பதவியேற்கிறாா். பங்களாதேஷ்...

கொழும்பு-புத்தளம் ரயில் பாதை முழுமையாக திறப்பு!

கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் ரயில் சேவைகள் இன்று (16) அதிகாலை முழுமையாக...