பெண் அபிவிருத்தி அதிகாரி மீது தாக்குதல்

Date:

கொழும்பு மாவட்டத்தின் கீழ் வரும் கெஸ்பேவ பிரதேச செயலாளர் பிரிவில் பணியாற்றும் பெண் அபிவிருத்தி அதிகாரி ஒருவர் மீது நேற்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தெல்தர மேற்கு கிராம சேவகர் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி மீதே இனம் தெரியாத ஒரு நபர் தாக்குதல் நடத்தி உள்ளார். குறிப்பிட்ட இந்த பெண் அதிகாரி அந்தப் பிரதேசத்தின் பின்தங்கிய பகுதிகளில் அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளை விநியோகம் செய்துவிட்டு தனது வீடு நோக்கி திரும்பி கொண்டிருக்கையிலேயே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவரைத் தாக்கி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்தியவரை தேடி பொலிசார் இப்பொழுது தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர் .

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...