மின்னல் தாக்கி 17 தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு!

Date:

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கி 17 தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்துவருகின்றது. மழையையும் பொருட்படுத்தாமல் தொழிலாளர்கள் இன்றும் வேலைக்குச்சென்றனர்.

இவ்வாறு கொழுந்து மலைக்குச்சென்று கொழுந்து கொய்துவிட்டு, கொழுந்தின் அளவை, பொதுவெளியில் வைத்து அளவிடுகையிலேயே நண்பகல் 12 மணியளவில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

மின்னல் தாக்கியதையடுத்து பாதிக்கப்பட்ட 17 ஆண் தொழிலாளர்களும் சுயநினைவை இழந்தனர் எனவும், அதிர்ச்சியால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...