மீண்டும் 21 ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து இரத்து

Date:

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மீண்டும் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதனால் அந்த நாட்களில் பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அத்தியவசிய சேவைகளில் ஈடுபடுகின்றவர்கள் கோரிக்கை விடுத்தால் அதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களை போக்குவரத்தில் ஈடுபடுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை கொரோனா கட்டுப்பாட்டுக்கான இறுதித் தீர்வு பயண கட்டுப்பாடு விதிப்பது அல்ல, இதற்கான தடுப்பூசியை வழங்குவதே சிறந்த தீர்வாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...