தற்போது மேற்கொள்ளப்படும் பி சிஆர் பரிசோதனையை குறைக்க எவ்வித எண்ணமும் தமக்கு இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் சுகாதார நிபுணர்கள் பகுப்பாய்வின் படி பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக இன்று (29) இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்திருந்தார்.
தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வேலை திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதை தவிர அதற்கு அழுத்தம் கொடுப்பதற்கு எவருக்கும் இடமளிக்க படாது என இராணுவ தளபதி மேலும் சுட்டிக்காட்டி தெரிவித்தார்.
இதேவேளை இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை (30) ஆரம்பமாக உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.