வெசாக் அலங்காரங்களில் பொலித்தீன், பிளாஸ்ரிக்கை முற்றாக தவிர்க்கவும் – சுற்றாடல் அமைச்சு

Date:

வெசாக் தினத்தை முன்னிட்டு இடம்பெறக்கூடிய அலங்கார செயற்பாடுகளின்போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைகளை முற்றாக தவிர்க்குமாறு பொதுமக்களிடம், சுற்றாடல் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுற்றுச்சூழலில் அதிகளவில் பொலித்தீன்கள் சேர்வதை தடுக்கும் வகையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் வருடாந்தம் 58 பில்லியன் ரூபா செலவில் 177,197 டொன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் இறக்குமதி செய்வதாக தெரிவித்துள்ளது.

எனினும் 12,636 டொன் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன்களையே மீள் சுழற்சி செய்ய கூடியதாகவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 92.29 சதவீதமானவை சுற்றுச்சூழலில் கலந்துவிடுவதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...