வெசாக் அலங்காரங்களில் பொலித்தீன், பிளாஸ்ரிக்கை முற்றாக தவிர்க்கவும் – சுற்றாடல் அமைச்சு

Date:

வெசாக் தினத்தை முன்னிட்டு இடம்பெறக்கூடிய அலங்கார செயற்பாடுகளின்போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைகளை முற்றாக தவிர்க்குமாறு பொதுமக்களிடம், சுற்றாடல் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுற்றுச்சூழலில் அதிகளவில் பொலித்தீன்கள் சேர்வதை தடுக்கும் வகையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் வருடாந்தம் 58 பில்லியன் ரூபா செலவில் 177,197 டொன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் இறக்குமதி செய்வதாக தெரிவித்துள்ளது.

எனினும் 12,636 டொன் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன்களையே மீள் சுழற்சி செய்ய கூடியதாகவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 92.29 சதவீதமானவை சுற்றுச்சூழலில் கலந்துவிடுவதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...