இந்தியாவின் கொரோனா நோயாளி ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “

Date:

இந்தியா பிராந்திய வல்லரசாக தன்னைத் தானே போற்றிக் கொண்டு உலக வல்லரசாக உலா வருவதற்கு கனவு கண்ட நாடு. ஆனால் உள்நாட்டில் அதன் மக்களுக்கு தேவையான அடிப்படை சுகாதார வசதிகள் கூட அங்கு இல்லை என்பது இப்போது உலக ஊடகங்களின் பிரதான தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இந்தியாவுக்கு ஆபத்து என்றதும் உலக நாடுகள் பல முண்டியடித்து உதவிகளை அனுப்பி வைத்தன ஆனால் அந்த உதவிகள் கூட இன்று உரிய இடங்களை போய் சேராமல் விமான நிலையங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இது மிகவும் கவலைக்கிடமான நிலை மட்டுமல்ல தற்போதைய நரேந்திர மோடி அரசின் கையாலாகாத்தனமும் கூட என்று ராஜதந்திர வட்டாரங்கள் குறை கூறும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து அவர்களுடைய சுகாதார கட்டமைப்பின் சீர்குலைவு பற்றியும் அதன் சின்னாபின்னமாகி உள்ள நிலை பற்றியும் அன்றாடம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு கொரோணா நோயாளி வெளியிட்டுள்ள காணொளி
பெரும் கவலைக்கிடமான தாக மட்டுமன்றி நகைப்புக்கிடமான தாகவும் மாறியுள்ளது. ஆஸ்பத்திரி கட்டிலில் இருந்தவாறு ” ” “நான் கடந்த சில தினங்களாக இங்கு இருக்கின்றேன் எனக்கு கொரோணாவை பற்றி அச்சம் எதுவும் இல்லை. ஆனால் என்னுடைய தலைக்கு மேலாக சுழன்று கொண்டிருக்கும் இந்த மின்விசிறியை பாருங்கள். இது எந்த நேரத்தில் எனது தலையில் விழுந்து விடுமோ என்ற அச்சம் தான் என்னை வாட்டி வதைக்கின்றது. இதை சரி செய்து தருமாறு உரியவர்களிடம் பல தடவை கூறி விட்டேன் ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவே இல்லை” என்று அந்த நபர் வெளியிட்டுள்ள காட்சி இப்பொழுது வைரலாக தொடங்கியுள்ளது.

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...