இந்தியாவின் கொரோனா நோயாளி ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “

Date:

இந்தியா பிராந்திய வல்லரசாக தன்னைத் தானே போற்றிக் கொண்டு உலக வல்லரசாக உலா வருவதற்கு கனவு கண்ட நாடு. ஆனால் உள்நாட்டில் அதன் மக்களுக்கு தேவையான அடிப்படை சுகாதார வசதிகள் கூட அங்கு இல்லை என்பது இப்போது உலக ஊடகங்களின் பிரதான தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இந்தியாவுக்கு ஆபத்து என்றதும் உலக நாடுகள் பல முண்டியடித்து உதவிகளை அனுப்பி வைத்தன ஆனால் அந்த உதவிகள் கூட இன்று உரிய இடங்களை போய் சேராமல் விமான நிலையங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இது மிகவும் கவலைக்கிடமான நிலை மட்டுமல்ல தற்போதைய நரேந்திர மோடி அரசின் கையாலாகாத்தனமும் கூட என்று ராஜதந்திர வட்டாரங்கள் குறை கூறும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து அவர்களுடைய சுகாதார கட்டமைப்பின் சீர்குலைவு பற்றியும் அதன் சின்னாபின்னமாகி உள்ள நிலை பற்றியும் அன்றாடம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு கொரோணா நோயாளி வெளியிட்டுள்ள காணொளி
பெரும் கவலைக்கிடமான தாக மட்டுமன்றி நகைப்புக்கிடமான தாகவும் மாறியுள்ளது. ஆஸ்பத்திரி கட்டிலில் இருந்தவாறு ” ” “நான் கடந்த சில தினங்களாக இங்கு இருக்கின்றேன் எனக்கு கொரோணாவை பற்றி அச்சம் எதுவும் இல்லை. ஆனால் என்னுடைய தலைக்கு மேலாக சுழன்று கொண்டிருக்கும் இந்த மின்விசிறியை பாருங்கள். இது எந்த நேரத்தில் எனது தலையில் விழுந்து விடுமோ என்ற அச்சம் தான் என்னை வாட்டி வதைக்கின்றது. இதை சரி செய்து தருமாறு உரியவர்களிடம் பல தடவை கூறி விட்டேன் ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவே இல்லை” என்று அந்த நபர் வெளியிட்டுள்ள காட்சி இப்பொழுது வைரலாக தொடங்கியுள்ளது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...