இலங்கை அணிவீரர்களின் பீ .ஸீ .ஆர் பரிசோதனை வெளியானதால் போட்டி நடைபெறுகிறது!

Date:

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கும், பயிற்சியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

இதனால் போட்டி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி இருந்த நிலையில் சமிந்த வாஸ் மற்றும் இசுரு உதானவிற்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்கு உள்ளான மூவருக்கும் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவர்களில் இருவருக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இலங்கை அணியின் புதிய வேகப்பந்து வீச்சாளர் ஸிரான் பெர்ணான்டோவிற்கு மாத்திரம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் போட்டியை நடத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...