இஸ்ரேல்-காசா 11 நாள் மோதல் முடிவுக்கு வந்துள்ளது

Date:

பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவுக்கும் இடையிலான 11 நாள் மோதலை முடிவுக்குக் கொண்டுவருதற்கான யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் குறைந்தது 230 பாலஸ்தீனியர்களும் 12 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேலின் அமைச்சரவை உடனடியாகவும் நிபந்தனைகளற்றதுமான மோதல் தவிர்ப்பை அமல்படுத்துவதற்கு நேற்று தீர்மானித்தது.

அதேபோன்று ஹமாசின் அமைச்சரவையும் இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு தரப்புக்கும் இடையில் கடந்த மே மாதம் 10 ஆம் திகதி முதல் தீவிர மோதல்கள் இடம்பெற்று வந்தன.

காசாவில் மரணித்தவர்களில் அதிகப்படியானவர்கள் சிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...