இஸ்ரேல்-காசா 11 நாள் மோதல் முடிவுக்கு வந்துள்ளது

Date:

பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவுக்கும் இடையிலான 11 நாள் மோதலை முடிவுக்குக் கொண்டுவருதற்கான யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் குறைந்தது 230 பாலஸ்தீனியர்களும் 12 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேலின் அமைச்சரவை உடனடியாகவும் நிபந்தனைகளற்றதுமான மோதல் தவிர்ப்பை அமல்படுத்துவதற்கு நேற்று தீர்மானித்தது.

அதேபோன்று ஹமாசின் அமைச்சரவையும் இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு தரப்புக்கும் இடையில் கடந்த மே மாதம் 10 ஆம் திகதி முதல் தீவிர மோதல்கள் இடம்பெற்று வந்தன.

காசாவில் மரணித்தவர்களில் அதிகப்படியானவர்கள் சிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...