இஸ்ரேல் தாக்குதலில் இன்று மேலும் 20க்கும் அதிகமானவர்கள் மரணம்!

Date:

காசா பிரதேசத்திலுள்ள ஷாட்டிஅகதிமுகாமில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல் காரணமாக 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நேற்று இரவு(14) இடம்பெற்றுள்ளது.

இன்று நண்பகல் வரை இந்த தாக்குதலில் சிக்குண்டு மரணமடைந்தவர்களின் சடலங்களை கண்டுபிடிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன .

இதுவரை குறைந்தபட்சம் பத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் எட்டு சடலங்கள் சிறுவர்கள் உடையது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன மேலும் பலர் இந்த விமானத் தாக்குதலில் சிக்குண்டு மரணம் அடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

 

தற்போது இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக ஷாட்டி அகதி முகாமுக்குள் தஞ்சம் புகுந்திருந்த மக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் விமானப்படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதேவேளை மேட்குக்கரை பிரதேசத்தில் பலஸ்தீன மக்கள் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் வீதிகளில் இறங்கியுள்ளனர்.
தம்மை எதிர்கொண்டு வரும் யுத்த தாங்கிகளையும் முழு கவசம் அணிந்த படைவீரர்களையும் வெறும் கற்களை கொண்டு அவர்கள் எதிர்த்து நிற்கின்றனர். இன்று நண்பகள் கிடைத்துள்ள தகவல்களின்படி இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்ட 11 பலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம்  சுட்டுக் கொன்றுள்ளது .

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...