உயிர்களை காக்க 164 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை கோரும் UNICEF!

Date:

தெற்காசியாவில் தீவிரமாக பரவி வரும் கொவிட்-19 இலிருந்து உயிர்களை காக்க உதவுவதற்கு, ஒட்சிசன் மற்றும் பரிசோதனைப் பொருட்களை, மருத்துவ உபகரணங்கள், தனிநபர் பாதுகாப்பு கருவிகளை, தொற்று பரவலை தடுக்கும், மற்றும் கட்டுப்படுத்தும் கருவிகளை கொள்வனவு செய்வதற்கும் 164 மில்லியன் அமெரிக்க டொலர்கள் UNICEF இற்கு அவசரமாக தேவையாக இருக்கின்றது.

உலகளாவிய புதிய தொற்றுக்களில் பாதியளவானது சுமார் 2 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த பிராந்தியத்தில் பதிவாகின்றது. ஒவ்வொரு நொடியிலும் மூன்றுக்கும் மேற்பட்ட புதிய கொவிட்-19 நோய்மாறிகள் பதிவாகின்றன. பிராந்தியத்தில் உயிரிழப்பு வீதமும் துரிதமாக அதிகரித்து வருகின்றது. கொவிட்-19 காரணமாக ஒவ்வொரு நிமிடத்திற்கும் மூன்று பேர் வரையில் உயிரிழக்கின்றனர்.

கொவிட்-19இன் இந்த புதிய பரவலின் வேகமும், அளவும் உயிர் காக்கும் சிகிச்சையை வழங்கும் நாடுகளின் இயலுமையில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்துகின்றது´ என தெற்காசியாவுக்கான UNICEF இன் பிராந்தியப் பணிப்பாளர் ஜோர்ஜ் லார்யா-அட்ஜே தெரிவித்தார்.

 

வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளன, ஒட்சிசனுக்கான மற்றும் ஏனைய மருத்துவ சாதனங்களுக்கான பற்றாக்குறை உள்ளது, சுகாதார முறைமை உடைந்து நொறுங்கக் கூடிய ஆபத்து உள்ளது´ என அவர் மேலும் தெரிவித்தார். இந்த பெருந்தொற்றின் முதல் அலையின் போது, அத்தியாவசிய சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டமையின் காரணமாக தெற்காசியா முழுவதிலும் சுமார் 228,000 சிறுவர்களும், 110,000 தாய்மாரும் உயிரிழந்தனர். ´முதல் அலையை விட நான்கு மடங்கு பெரிய ஒரு பரவல் அளவை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். சிறுவர்களுக்கும், தாய்மாருக்குமான முக்கிய சுகாதார பராமரிப்பு சேவைகளை பேணும் அதேவேளை, கொவிட்- 19 இனைத் தடுப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் எம்மால் இயன்ற அனைத்தையும் நாம் செய்ய வேண்டும்´ என லார்யா-அட்ஜே மேலும் கூறினார்.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...