உலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 16.58 கோடியை தாண்டியது

Date:

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16.58 கோடியை(165,857,655*) கடந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேபோன்று கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 34.44 இலட்சத்தை (3,444,901*) கடந்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பமான கொரோனா வைரஸ் தொற்று பெரும்பாலான உலக நாடுகளில் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த வைரஸ் தொற்று பரவல், ஆரம்பித்து ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்துள்ளபோதிலும் இதன் வீரியம் இதுவரையிலும் குறையவில்லை. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 16.58 கோடியைக் கடந்துள்ளது.

அதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 14.65 கோடிக்கும் (146,539,738)அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1.58 கோடிக்கும் அதிகமானோர் இன்றுவரை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களில் 99000 க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...