“எமது அணி வீரர்கள் அனைவரும் வீடு திரும்பிய பின்னரே நான் எனது ஊரிற்கு செல்வேன்”-அணித்தலைவர் தோனி!

Date:

இந்தியாவில் கொவிட் தொற்றின் நிலை தீவிரமென்பதால் ஐ.பீ.எல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் பத்திரமாக வீடு போய் சேர்ந்த பிறகே நான் எனது வீடு திரும்புவேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (05) காலை காணொளி அழைப்பு மூலம் தனது அணி வீரர்களுடன் கதைத்த தோனி ” முதலில் வெளிநாட்டு வீரர்கள் தமது நாடுகளுக்குத் திரும்ப முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதன் பிறகு உள்ளூர் வீரர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.

அணி வீரர்கள் அனைவரும் சென்ற பிறகு தான் நான் எனது ஊரான ராஜ்சிக்கு செல்வேன் அதுவரை டெல்லியில் தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

மைக்கல் ஹஸி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதால் அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்குப் போக ஆரம்பித்துள்ளனர்.

இந் நிலையில் இன்று (06) மாலை தோனி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தனது சொந்த ஊருக்கு திரும்ப உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...